கோவை, நவம்பர் 15: குண்டர் தடுப்புச்சட்டத்தின் கோவையைச் சேர்ந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அன்று கோவையைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஆனந்தகுமார் என்ற இருவர் செல்வபுரத்தை அடுத்த ஐ.யு.டி.பி. காலனி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சூர்யா, விக்னேஷ் குமார், விஜய்ராஜ், சூர்யா மற்றும் மோகன் ராஜ் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பொது பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறை மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.