ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல நிர்பந்திப்பதை கண்டித்து அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 13: 

ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல வலியுறுத்தும் செஞ்சிலுவைச்சங்க நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரை அவரவர் வீட்டிற்கு கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. 

சமீபகாலமாக அரசின் அமரர் ஊரிதியில் ஒரே நேரத்தில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் மாவட்ட திட்ட உதவியாளர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்பந்தத்தினால் தான் இது போன்ற அவலம் ஏற்படுகிறது என்றும், முறையான ஊதியம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று காலை கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அமரர் ஊர்தி ஓட்டுனர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 10 அமரர் ஊர்திகள் உள்ளன. ஆனால், 2 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக அளவில் பிரேதங்கள் வரும்போது அவற்றை மொத்தமாக அரசு வாகனத்தில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால், ஓட்டுனர்களுக்கும் பிரேதத்தின் உறவினர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை அவர்களால் ஓட்டுனர்கள் தாக்கப்படுகின்றனர்.

அதோடு, 525 ரூபாய் ஊதியம் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் 215 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுக்கின்றனர். பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவை சங்க நிர்வாகம் ஓட்டுனர்களின் உழைப்பை திருடுகின்றது. இதைத்தடுக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்ப்பார்த்திருக்கிறோம்.



இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...