"உதவுங்கள், இல்லை என்னை கருணை கொலை செய்யுங்கள்"

கோவை, நவம்பர் 13

விபத்தில் பாதிக்கபட்டு வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளதால் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய கோரி சோமனூரை சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவையை அடுத்து சோமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(51). தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு விபத்து ஏற்பட்டதில் முதுகுதண்டு பாதிக்கபட்டு இடுப்பிற்கு கீழ் செயல்படாமல் அவதிபட்டு வந்துள்ளார். இவருக்கு குழந்தை தெரேசா என்ற மனைவியும் ஆணிஸ் வெனிட்டா(18) கல்லூரியில் பயிலும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி குழந்தை தெரேசாவிற்கும் ஒரு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இவர்கள் இருவரையும் கவனிக்க வேண்டிய நிலையில் ஆணிஸ் வெனிட்டா கல்லூரி படிப்பை தொடர முடியாமலும் தங்களை கவனித்து கொள்ள வேண்டி இருப்பதால் வேலைக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளதாக கூறினார்.

மேலும், வருமானமின்றி சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒரு வேளை உணவளித்து வருகின்றனர் எனவும் மாதம் 2000 மருத்துவ செலவு ஆவதால் தங்களால் அதை கூட செலவு செய்ய முடியாத நிலை உள்ளதாக வர்கீஸ் தெரிவித்தார். இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கபட்டு உள்ளதாக கூறியவர் மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் உதவி கோரி மனு அளித்து 3 வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியவர் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிடகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...