புதுப்பொலிவுடன் வெளியாகியுள்ள மாநகராட்சி வலைதளம்

கோவை, நவம்பர் 12

கோவை மாநகராட்சி தொடர்பான பல்வேறு செய்திகள், தகவல்கள் மற்றும் இ-சேவை வசதிகள் அடங்கியுள்ள மாநகராட்சி வலைதளம், கூடுதல் தகவல்களோடு புதுப்பிக்கப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்படுள்ளது.



புதிதாக வெளியாகியுள்ள இந்த வலைதளத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், வானிலை நிலவரம்,  புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள், மாநகராட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள், வாட்ஸ் ஆப் மற்றும் குறுந்தகவல் மூலமாக புகார் தெரிவிக்கும் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.



மாநகராட்சிக்குட்பட்ட வரித்துறை, பொறியியல், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், நகரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டம், குப்பை மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும், அதில் பணிபுரியும் முக்கிய அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய அரசின் சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்வச் பாரத், ஸ்வச்சத்தா போன்ற பல்வேறு திட்டங்களின் வலைதளங்கள் மற்றும் செயலிகளை எளிதாக தொடர்புகொள்வதற்கான வசதிகளும் இந்த  வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.



மேலும், கோவை மாநகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தளங்கள், கோவில்கள், பேருந்து வசதிகள், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நேரம் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

'இந்த வலைதளத்தை உபயோகித்து, அரசின் பல்வேறு இ-சேவைகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். மேலும், மாநகராட்சி நிர்வாகம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக செயலின் மூலமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதோடு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரிந்துகொள்ளலாம். இதனால், பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே உள்ள தூரம் வெகுவாக குறையும்' என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...