சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கோவை, நவம்பர் 10

கோவை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பிரபாகரன், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மயங்கி விழுந்தார்.

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் 3 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனைக் கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கனியூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு தொடர்பாக சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட போது, பிரபாகரன் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...