கொடிசியா அருகே உருவாகியுள்ள கழிவுநீர் குட்டை

கோவை, நவம்பர் 08: கொடிசியாவிலிருந்து கோவை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நீர் வாய்க்காலின் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால், மழைநீரும் கழிவுநீரும் வாய்க்காலின் ஒரு பகுதியில் தேங்கி, நீர் குட்டையாக உருவாகியுள்ளது. இதனால், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை பரப்பும் ஆபத்தான கொசுக்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் புகாரளிக்கின்றனர்.



கொடிசியா மற்றும் அதனை ஒட்டியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், மழைநீரும் இந்த வாய்க்கால் வழியாக வடிந்து அவினாசி சாலை நோக்கி செல்கிறது. இந்நிலையில், சுமார் முப்பது அடி நீளத்திற்கு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொடிசியா வளாகம் அருகிலேயே கழிவுநீர் தேங்கி சாலையை நோக்கி வடியத்தொடங்கியுள்ளது.



‘பல மாதங்களாக இந்த வாய்க்கால் பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர் வடிய வழியின்றி சாலையை நோக்கி வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், வாய்க்காலின் அருகே உள்ள தனியார் நிலத்தின் உரிமையாளர்கள் சிலர், வாய்க்காலின் பாதையில் மண் அடைப்பு ஏற்ப்படுத்தி, கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாக’ குடியிருப்பு வாசிகள் புகாரளிகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், உரிமையாளருடைய தொடர்பு எண்கள் சாமர்த்தியமாக அழிக்கப்பட்டுள்ளன.



‘உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதோடு ஆக்கிரமிப்பாளர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் ஓர் குடியிருப்பு வாசி.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...