பண மதிப்பிழப்பு தினம் கருப்பு தினமாக அனுசரிப்பு

கோவை, நவம்பர், 8: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கருப்பு தினமாக அனுசரித்தனர்.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதியன்று மத்திய பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டது. உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, வங்கிகளில் பணமாற்று நடவடிக்கையின் போது முதியவர்கள் உள்ளிட்ட பலர் கூட்ட நெரிசல் மற்றும் இதர விபத்துக்களினால் உயிரிழந்தனர். இதனிடையே, பண மதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

இந்த தினத்தினை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், லஞ்சம் ஒழியும், தீவிரவாதத்திற்குச் செல்லும் பணம் தடை படும், கருப்புப் பணம் ஒழியும் என்று பாஜக அரசால் சொன்னவை எதுவுமே நடக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதுடன் இதுவரை அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறு, குறு தொழில் வணிகர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் சார்பிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...