பண மதிப்பிழப்பு தினம் கருப்பு தினமாக அனுசரிப்பு

கோவை, நவம்பர், 8: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கருப்பு தினமாக அனுசரித்தனர்.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதியன்று மத்திய பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டது. உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, வங்கிகளில் பணமாற்று நடவடிக்கையின் போது முதியவர்கள் உள்ளிட்ட பலர் கூட்ட நெரிசல் மற்றும் இதர விபத்துக்களினால் உயிரிழந்தனர். இதனிடையே, பண மதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

இந்த தினத்தினை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், லஞ்சம் ஒழியும், தீவிரவாதத்திற்குச் செல்லும் பணம் தடை படும், கருப்புப் பணம் ஒழியும் என்று பாஜக அரசால் சொன்னவை எதுவுமே நடக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதுடன் இதுவரை அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறு, குறு தொழில் வணிகர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் சார்பிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...