"கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்"


கோவை, நவம்பர் 7: கோவை, ஒண்டிப்புதூர் அருகே இருகூர் இரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் மீது அதிகளவிலான விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது:- "இருகூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் தற்போது வரை இங்கு விபத்து ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் கூட அமைக்கப்படாத அவலநிலை நீடிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை இந்த மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திமுக ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாட்டின்போது, அடிக்கல் நடப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் மக்கள் பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் போடப்பட்ட வரைபடத்தை மாற்றி தனியார் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டம் முழுக்க ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கோவையில் தற்போது நடைபெற்று வரும் 7 மேம்பாலப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...