2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

நவம்பர் 7: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தேதியினை மீண்டும் ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் இருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தேதி இன்று (நவம்பர் 7) அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய இன்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி  ஷைனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்களன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்று அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது அத்திருப்தியை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...