53-வது வார்டு பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டத்தின் 53-வது வார்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். 

தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 



இதன் ஒருபகுதியாக, மத்திய மண்டலம் 53-வது வார்டுக்குட்பட்ட வி.கே.கே. மேனன் ரோடு, ஆவாரம்பாளையம் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளை விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்புகளின் நீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதைப் பார்வையிட்ட அவர், ஆவாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களைச் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து, அதேபகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்திலுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அகற்ற உத்தரவிட்டதோடு, குப்பைகளைத் தேக்கிய சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.ப.காந்திமதி, நகர்நல அலுவலர் டாக்டர்.க.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் திரு. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...