நண்பரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை

கோவை, அக்டோபர் 30:  கடந்த 2013-ம் ஆண்டு நண்பனைக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார். 

கூடலூரைச் சேர்ந்த வஹிதா பானு என்பவர் கணவர் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்தால் அடிமையான தனது கணவருடன் வாழ பிடிக்காத பானுவுக்கு, எதிர் வீட்டைச் சேர்ந்த மதிவாணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்போது, கோவையில் ஏதாவது நிறுவனத்தில் தனக்கு வேலை வாங்கித் தருமாறு பானு, மதிவாணனிடம் கேட்டுள்ளார். அதன்பேரில், இருவரும் கோவைக்கு வந்துள்ளனர். 

கோவையில் துணிக்கடையில் பானுவுக்கு வேலைகிடைத்தது. அப்போது, சாய்பாபா காலனி, கே.கே.புதூரைச் சேர்ந்த சதீஷ் (30) என்ற தனது நண்பனை மதிவாணன் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால், பானுவுடனான தொடர்பை மதிவாணன் சிறிது காலம் துண்டித்திருந்தார். பின்னர், சுமார் 6 மாதத்திற்கு பிறகு, உறவைப் புதுப்பிப்பதற்காக அலைபேசியில் பானுவை மதிவாணன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனக்கும், சதீஷிக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக பானு கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த மதிவாணன், சதீஷை கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, கண்ணில் மிளகாய் பொடித்தூவி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீஸார், மதிவாணனை கைது செய்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும்,  அதனைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்படும் என அவர் ஆணையிட்டார். 

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...