கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலனை விடுதலை செய்யக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் மாவட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.



இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

"சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி படுகையில் மணல் கடத்தல், கூடங்குளம் அணு உலை, கனிமவளங்கள் கடத்தல், இதர ஆறுகளில் மணல் கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக போராடி வரும் அவரை சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு ஆதரவாக காவல் துறை கைது செய்துள்ளது. உடனடியாக முகிலனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூடங்குளத்தில் போராடியதற்காக பொதுமக்கள் மீது பதியப்பட்ட 132 வழக்குகளையும் திரும்பப் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியும் இது வரை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...