அதிக அளவு ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனத்திற்கு விருது

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் சொடலமுத்து அன்ட் கோ நிறுவனத்திற்கு சிறப்பு  ஏற்றுமதி விருதை கேரள அமைச்சர் வழங்கி கவிரவித்தார். 



கோவையை மையமாகக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வெளிநாடுகளுக்கு அதிகளவிலான வர்த்தகத்தை செய்து வருகின்றன சில நிறுவனங்கள். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு, ஆண்டுதோறும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், 2015-2016 ஆம் ஆண்டில், அதிகளவில் ஏற்றுமதி செய்த சொடலமுத்து அன்ட் கோ நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. கே.எஸ். பாலமுருகனிடம், கேரள தொழில்துறை அமைச்சர் திரு. ஏ.சி. மொய்தீன் வழங்கினார். 

1970-ம் ஆண்டு முதல் காகிதக் கோண்கள், குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம்,  அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, எகிப்து, துருக்கி, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. 

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...