சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டுகோள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர் தேக்கம் ( sump) , மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளை Overhead tanks)  சுத்தம் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, 

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் மேல் நிலைநீர் தேக்க தொட்டிகளை கண்டிப்பாக சுத்தம் செய்தல் வேண்டும். அதற்கு ஏதுவாக இந்த இரு நாட்களில் மட்டும் மதியம் 02.00 மணிக்குமேல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

டெங்குவை கட்டுக்குள் வைப்பதற்கு தினந்தோறும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமரிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான லார்வாக்களை அழிப்பதற்கு அபேட் மருந்துகளை தெளிக்கப்பட்டு வருகின்றது. மழைகாலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாகும் மூலங்களை கண்டறிய உதவி செய்வார்கள். மேலும் சுகாதாரதுறை அலுவலர்கள் வீட்டினை ஆய்வு செய்யும் போது தக்க ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தை டெங்கு கொசு இல்லா மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளில் தங்களை முழு அளவில் அர்ப்பணித்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...