விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் பிரச்சாரம்

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

கடும் வறட்சி, விவசாயக் கடன் போன்றவைகளால் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, விவசாயம் அழிந்து, உணவிற்காக அடுத்த மாநிலத்தையோ, நாட்டையோ சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுமோ என்று தற்போதைய இளைஞர்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் குர்ஷித் ஹுசேன், சுரேஷ், புருஷோத், ஆண்ட்ரு, இம்ரான், ஓஸ்வல் ஹுசேன் மற்றும் ராஜா ஆகிய 7 இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்தனர். 



அதன்படி, கடந்த 22-ம் தேதி சென்னையில் தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள், வரும் நவம்பர் 2-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இதுவரை 900 கி.மீ. பயணம் செய்துள்ள இளைஞர்கள், ஊட்டியில் இருந்து இன்று (அக்.,26) மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களை, ஊட்டி செல்லும் பேருந்துநிறுத்தம் அருகே கோவை இளைய தலைமுறை மற்றும் கோவை பைக்கர்ஸ் கிளப்பினர் வரவேற்றனர். 



இது தொடர்பாக இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இம்ரான் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆதரவான இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அனைத்து செலவுகளும் எங்களுடையதே,. விவசாயிகளிடம் பேரம் பேசுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இதுபோன்று செய்வதால், ஏழை விவசாயி, மேலும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கல்விப் பாடத்திட்டங்களில், விவசாயம் பற்றி கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...