பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சமூக பணித் துறை மாணவர்கள் சார்பாக ரத்தினபுரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.



பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் செயல்முறைகள், டெங்கு கொசு உருவாவதை தடுப்பது மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குவது பற்றிய தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக கோவை மாநகராட்சியோடு இணைந்து பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட சமூக பணித் துறை மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



'மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற நோய்கள் தேங்கி நிற்கும் தண்ணீர், அகற்றப்படாத குப்பைகள் போன்ற சுகதாரமற்ற சுற்றுச்சூழல் காரணமாகத் தான் உருவாகிறது. எனவே இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். மாநகராட்சி நிர்வாகிகளோடு இணைந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார் மாணவி மதுபாலா.



இந்த பிரச்சாரத்தில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய வீதி நாடகம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப் பட்டது. பின் ரத்தினபுரி முதல் பவர் ஹவுஸ் வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.



இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் பங்கேற்றார்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...