டெங்கு ஒழிப்பு பணிகள் : மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகளவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் வீதியில் இன்று (அக்டோபர் 25) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளை பார்வையிட்டார்.



இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதேப்போன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதனைத்தொடர்ந்து, சிறப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் பங்கேற்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...