டெங்கு ஒழிப்பு பணிகள் : மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகளவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் வீதியில் இன்று (அக்டோபர் 25) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளை பார்வையிட்டார்.



இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதேப்போன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதனைத்தொடர்ந்து, சிறப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...