டெங்கு ஒழிப்பு பணிகள் : மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகளவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் வீதியில் இன்று (அக்டோபர் 25) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளை பார்வையிட்டார்.



இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதேப்போன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதனைத்தொடர்ந்து, சிறப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...