கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகளவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் வீதியில் இன்று (அக்டோபர் 25) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதேப்போன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, சிறப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி காமாட்சிபுரம் வீதியில் இன்று (அக்டோபர் 25) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதேப்போன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, சிறப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், கே.கே.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் பங்கேற்றனர்.