தீத்திபாளையம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

தீத்திபாளையம் பகுதியில் ஆட்டைத் தாக்கி சிறுத்தை கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது தீத்திபாளையம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வழக்கம்.

இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 மணியளவில் தீத்திபாளையத்திற்கு உட்பட்ட வேடப்பள்ளம் பகுதியில் நுழைந்த சிறுத்தை அங்கு வி.ஆறுச்சாமி (52) என்பவருக்கு சொந்தமான ஆடுகளைத் தாக்கியது. 

இதனைத்தொடர்ந்து, ஆடுகளின் அலரல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ஆறுச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. மேலும், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



இதுகுறித்து ஆறுச்சாமி கூறுகையில், நான் இப்பகுதியில் சுமார் 13 வருடங்களாக வசித்து வருகின்றேன். இதுபோன்ற சம்பவத்தை பார்ப்பது இதுவே முதன்முறை. இரவு ஆடுகளை கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த சிறுத்தை தாக்கி எனது 4 வயது மதிக்கத்தக்க பெண் ஆடு உயிரிழந்துவிட்டது. மேலும், பல ஆடுகள் காயமடைந்துள்ளன. அந்த சிறுத்தை மீண்டும் இங்கு வர வாய்ப்புள்ளது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...