தீத்திபாளையம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

தீத்திபாளையம் பகுதியில் ஆட்டைத் தாக்கி சிறுத்தை கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது தீத்திபாளையம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வழக்கம்.

இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 மணியளவில் தீத்திபாளையத்திற்கு உட்பட்ட வேடப்பள்ளம் பகுதியில் நுழைந்த சிறுத்தை அங்கு வி.ஆறுச்சாமி (52) என்பவருக்கு சொந்தமான ஆடுகளைத் தாக்கியது. 

இதனைத்தொடர்ந்து, ஆடுகளின் அலரல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ஆறுச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. மேலும், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



இதுகுறித்து ஆறுச்சாமி கூறுகையில், நான் இப்பகுதியில் சுமார் 13 வருடங்களாக வசித்து வருகின்றேன். இதுபோன்ற சம்பவத்தை பார்ப்பது இதுவே முதன்முறை. இரவு ஆடுகளை கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த சிறுத்தை தாக்கி எனது 4 வயது மதிக்கத்தக்க பெண் ஆடு உயிரிழந்துவிட்டது. மேலும், பல ஆடுகள் காயமடைந்துள்ளன. அந்த சிறுத்தை மீண்டும் இங்கு வர வாய்ப்புள்ளது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.



Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...