20 ஆண்டுகள் வீடில்லாமல் இருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வீடில்லாமல் சாலையில் தங்கியிருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சிச் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவில், துடியலூர் சந்தையில் திறந்த வெளியில் வீடில்லாமல் வசிக்கும் சாட்டையடி மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது. சாட்டையடி மக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளின்றி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் வசிப்பதும், வளர்மகளிர் நிலையும் மிக மோசமாய் உள்ளது. 



கைகளை அறுத்து சாட்டையால் அடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அவ்வாறு பிழைத்து வரும் சாட்டையடி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். அம்மக்கள் சுயமரியாதையோடு வாழ மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்புரிமை நிதியில் இருந்து வீடு வழங்கியும், மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியும் உடனடியாக வழங்கிட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...