விவசாயிகள் பெயரில் இடைத்தரகர்கள்: கோவையில் உழவர் சந்தையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்து அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் இன்று உழவர் சந்தையை முற்றுகையிட்டனர்.



சிங்காநல்லூர் ஹவுசின்ங் யூனிட் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் திரளாக இங்கு காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் உழவர் சந்தையாக விளங்கி வரும் இங்கு சமீப காலமாக நிர்ணயம் செய்யப்படும் விலைபட்டியலுக்கு அதிகமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல காய்கறி வாங்க வந்த பொது மக்கள், உழவர் சந்தை விலைபட்டியலை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, உழவர் சந்தை அதிகாரியான கில்டா ஸ்டீபனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபடுவதாகவும், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கு உழவர் சந்தையில் விற்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இது போன்று இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்துவிட்டால், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறிக்கு உள்ளாவதுடன், பொதுமக்களும் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறி உடனடியாக இடைத்தரகர்களை வெளியேற்ற வேண்டும். விலைப்பட்டியலில் உள்ளவாறு நியாயமான விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உழவர் சந்தை அதிகாரி கில்டா ஸ்டீபனிடம் மனு அளித்தனர்.



மக்களின் இந்த திடீர் முற்றுகையால் சிங்காநல்லூர் உழவர் சந்தை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...