கோவையில் முதியோர்களுக்கான தடகளப் போட்டி துவக்கம்

கோவை மாவட்ட அளவில் முதியோர்களுக்கான தடகளப்போட்டி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.



கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் முதியோர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன . அதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன .

35 வயதிலிருந்து 80 வயதுக்கு மேலானவர்கள் பங்கேற்றுள்ள இந்த தடகளப் போட்டியில் வயதின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றது.



250 ஆண்களும், 60 பெண்களும் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தையம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தடை தாண்டுதல் உட்பட இருபத்தைந்து வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.



இப்போட்டியில், 55 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் மூத்தோர் தடகள சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...