அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சேவை மையங்கள் திறப்பு

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையப்பம்பாளையம், கரியம்பாளையம் ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தெலுங்குபாளையம் கிராமத்திலும், கரியம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம் கிராமத்திலும் இன்று (அக்டோபர் 21) தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் பேசுகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின் கனவுத்திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டம் நினைவாகி வருகின்றது. 

அதுமட்டுமல்லாமல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவினாசி அன்னூர் பகுதிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழச்சியில், கோட்டாட்சியர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, வட்டாட்சியர் ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...