அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சேவை மையங்கள் திறப்பு

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையப்பம்பாளையம், கரியம்பாளையம் ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தெலுங்குபாளையம் கிராமத்திலும், கரியம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம் கிராமத்திலும் இன்று (அக்டோபர் 21) தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் பேசுகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின் கனவுத்திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டம் நினைவாகி வருகின்றது. 

அதுமட்டுமல்லாமல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவினாசி அன்னூர் பகுதிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழச்சியில், கோட்டாட்சியர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, வட்டாட்சியர் ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...