எலும்பு பிரச்சனைகளை தடுக்க 50 வயதினைக் கடந்தவர்களுக்கு விழிப்புணர்வு தேவை

கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் "உலக எலும்புப்புரை நாள்" விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது, தங்களின் வழக்கமான வேலைகளை பாதிக்கும் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவுகளை தடுக்க 50 வயதினைக் கடந்தவர்களுக்கு முறையான விழிப்புணர்வு தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, கங்கா மருத்துவமனை எலும்புப் புரை துறை தலைவர் மருத்துவர் எஸ்.ராஜசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் உலக அளவில் 8.9 மில்லியன் மக்கள் எலும்பு முறிவுகள் மற்றும் எலும்புப்புரையின் விளைவாக பாதிக்கப்படுகின்றனர். 50 வயதைக் கடந்த மூன்றில் ஒரு பெண்ணிற்கு ஆஸ்டியோபோரோடிக் என்னும் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது "நுண்ணிய எலும்பு" என்று பொருள். ஒரு நுண்ணோக்கியின் கீழ் பார்த்தால், ஆரோக்கியமான எலும்பு ஒரு தேன்கூடு போல் தோன்றுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் போது, ​​தேன்கூடு போன்றுள்ள துளைகள் மற்றும் இடைவெளிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை அறியலாம்.



இதுபோன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சை மற்றும் தினசரி பணிகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றார். 

எலும்புப்புரை நோய்க்கென சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் வகையில் கங்கா மருத்துவமனையில் டெக்ஷா ஸ்கேன், இரத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பு வழிமுறைகளுக்கு மருத்துவ வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, புகழ்பெற்ற பேராசிரியர் பிரவீன் சுல்தானா "வல்லமை தாராயோ" என்னும் கருவின் கீழ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...