பேச்சுவார்த்தையில் உடன்பாடு- துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் நியாயமான போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனையை 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி இன்று காலை முதல் நகரை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டுக்கான முறையான போனஸ், சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஒப்பந்த தொழிலாளர் சார்பாக முறையான தினக்கூலி, வார விடுமுறை, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்குதல் மற்றும் நியாயமான போனஸ் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி, குழுக்கள் அமைத்து மூன்று வாரங்களுக்குள் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...