வருமான வரித்துறை அதிகாரி மாயம் - 5 தனிப்படைகள் அமைத்து தேடும் பணி தீவிரம்


கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார் மாயமானதாக குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கோவை வருமான வரித்துரை துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவரது தந்தை செண்பக ராமன் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். 38 வயதான சிவக்குமாருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமார் கோவை பீளமேடு அருகேயுள்ள கவுதமபுரி நகர் பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் இருந்து சிறு சூட்கேசுடன் வெளியேறியுள்ளார். அதன்பின்னர் சிவக்குமார் வீடு திரும்பாத நிலையில், கடந்த 3 நாட்களாக அவரை காணவில்லை என பீளமேடு காவல்நிலையத்தில் அவரது சகோதரர் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை தேடும் பணியில் 5 தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

காவல்துறையினர் நடத்தி விசாரணையில் சிவக்குமார் தனது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே வைத்து சென்றிருப்பதும், இரவு நேரத்தில் நேர்த்தியாக உடையணிந்து அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றது, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வெளியேறினாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை துணை ஆணையர் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...