சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுசூழல் மாசுபடாமல் பாதுகாக்க, சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், ”பசுமையான தீபாவளி” கொண்டாட கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடியிருப்பு சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பாக பாராட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இது சம்பந்தமாக பசுமை தீபாவளியை கொண்டாடிய அனுபவங்களை புகைப்படங்களாகவோ அல்லது வீடியோப் பதிவாகவோ வாட்ஸ்ஆப் எண். 8190000400-ல் வரும் திங்கட்கிழமை வரை அனுப்பலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், கோவை மாநகராட்சியின் சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தீபாவளியை பசுமையான தீபாவளியாக கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுசூழல் மாசுபடாமல் பாதுகாக்க, சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், ”பசுமையான தீபாவளி” கொண்டாட கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடியிருப்பு சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பாக பாராட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இது சம்பந்தமாக பசுமை தீபாவளியை கொண்டாடிய அனுபவங்களை புகைப்படங்களாகவோ அல்லது வீடியோப் பதிவாகவோ வாட்ஸ்ஆப் எண். 8190000400-ல் வரும் திங்கட்கிழமை வரை அனுப்பலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், கோவை மாநகராட்சியின் சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தீபாவளியை பசுமையான தீபாவளியாக கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.