பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாரதியார் பல்கலைக் கழகத்தில் தகுதி உடையவருக்கு பணி வழங்காமல் மற்றவர்க்கு பணி வழங்கிய அப்பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்டம், நவாவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி பிரபா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து ஸ்ரீ லட்சுமி பிரபா கூறியதாவது:-

"கடந்த 2011 ஆம் ஆண்டு பையோ டெக் பிரிவில் முதுகலை பட்டம் முடித்த நான் பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணை பேராசிரியர் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். 

எஸ்.சி அல்லது அருந்ததியர் பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து இந்த பணியிடம் நிரப்ப வேண்டும். அந்த பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வராதபட்சத்தில் அதற்கு அடுத்தபடியாக உள்ள பிரிவில் இருந்து வரும் பெண் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது மேற்குறிப்பிட்ட பையோ டெக் துணை பேராசிரியர் காலிப் பணியிடம் மாற்று பிரிவில் ஆண் விண்ணப்பதாரர் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அப்பல்கலைக் கழக துணை வேந்தரிடம் முறையிடுகையில் சரியான பதில் வழங்கவில்லை. மேலும், பாரதியார் பல்கலையில் 20 வருடத்திற்கும் மேலாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த எனது கணவர் கனகராஜையும் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.

இதுகுறித்து, மனித உரிமை ஆணையம், தேசிய ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற்றால் மட்டுமே எனது கணவருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என மிரட்டல் விடுக்கப்படுகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு எனது கணவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், தகுதியுடைய எனக்கு துணை பேராசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளேன்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...