பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் பொதுச்சொத்துக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும்- மாநகர காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்து பொதுச்சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எந்த காரணத்தைக் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் அருகே மற்றும் மின் மாற்றிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.

நெடுஞ்சாலைகள் உட்பட போக்குவரத்து உள்ள எந்த சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுச்சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.

சட்டவிதிகளுக்குட்பட்ட மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...