கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியிம் ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

வால்பாறை அடுத்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா டேன் டீ எஸ்டேட்டில் சுமார் 900-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு, 8.33 போனஸ் மட்டுமே கொடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டேன் டீ எஸ்டேட்டின் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை தொழிலாளர் ஆணையாளர் முகமது யூசப் தலைமையில் டேன் டீ நிர்வாக மேலாளர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் டேன் டீ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசிடம் இருந்து அரசாணை வந்தபின்பு வழங்குவதாக நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இன்று (அக்.,14) மாலைக்குள் போனஸ் வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த ப்போவதாக தொழிலாளர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

வால்பாறை அடுத்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா டேன் டீ எஸ்டேட்டில் சுமார் 900-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு, 8.33 போனஸ் மட்டுமே கொடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டேன் டீ எஸ்டேட்டின் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை தொழிலாளர் ஆணையாளர் முகமது யூசப் தலைமையில் டேன் டீ நிர்வாக மேலாளர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் டேன் டீ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசிடம் இருந்து அரசாணை வந்தபின்பு வழங்குவதாக நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இன்று (அக்.,14) மாலைக்குள் போனஸ் வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த ப்போவதாக தொழிலாளர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.