கோவையில் செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான சிட்கோவும், கொசிமாவும், கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன.
கோவையில் பெரும்பாலானோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொசிமாவும், சிட்கோவும் கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தன.
இதில், சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேலைபார்க்கும் தொ ழிலாளர்கள் அனைவரும் காய்ச்சல், சளி போன்றவற்றிகும், காயம் ஏற்பட்டால் முதலுதவிக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுaகின்றனர்.