உடுமலையில் அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேரை பலி கொண்ட கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ள அரசுக்கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாழடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால், மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளி மாணவர்கள் வகுப்பில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே, தரமற்ற இந்தக் கட்டிடத்தை கட்டிய கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 



இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறுகையில், பள்ளிக் கட்டிடத்தை ஒப்பந்தக்காரர் அவசர அவசரமாக கட்டியதால், மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையால், வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதனால், சில மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு இன்று (அக்.,13) விடுமுறைப்பட்டதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணை நடக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...