கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் வட இந்தியா-வில் இருந்து கோதுமை வாங்கி இங்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்ததையடுத்து நிறுவனத்தின் பிரதிநிதிகளை ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
அப்போது மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஷ்யாமா (28) என்ற பெண்ணும் உடனிருந்தார்.
அவர்களிடம் பெண் உதவி ஆய்வாளர் பிரபாவதி விசாரணை நடத்தியபோது, உதவி ஆய்வாளரை ஷ்யாமா தரக்குறைவாக பேசியதாகவும், சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஷ்யாமா மீது அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.