குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற மில் ஊழியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் நெரிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (28). கோவை ஒண்டிப்புதூர் அடுத்துள்ள கதிர் மில் பஞ்சாலையில் பணியாற்றிய இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த முருகேஷ்வரிக்கும் காதல் ஏற்பட்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமனதிற்கு பின் பாக்யராஜிற்கு குடிபழக்கம் ஏற்பட்டு மது அருந்த பணம் கேட்டு மனைவுடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்தவர் வேலைக்கும் ஒழுங்காக செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2.11.2013 அன்று பாக்யராஜ் முருகேஷ்வரியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். முருகேஷ்வரி பணம் தர மறுக்க ஆத்திரமடைந்த பாக்யராஜ் முக்காலி கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்தவர். அதை மறைப்பதற்கு முருகேஷ்வரி தூக்கில் தொங்கவிட்டு  தற்கொலை செய்ததது கொண்டது போல் நாடகமாடியுள்ளார்.

இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. பிரேத பரிசோதனையில் முருகேஷ்வரி கழுத்து நெறித்து கொல்லபட்டது உறுதி செய்யபட பாக்யராஜ் மீது வழக்கு பதியப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொலை செய்தல்,தடயத்தை மறைத்தல் ஆகிய 2 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று தீர்ப்பு அளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி (பொறுப்பு) 302 பிரிவின் கீழ் பாக்யராஜிற்கு ஆயுள் தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தவர் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 201 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் 3 மாத  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கும்படி மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி (பொறுப்பு) தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...