பல வருட போராட்டங்களுக்கு பின் இறுதியாக கோவை சிங்கபூருடன் விமான வழியாக இணைய போகிறது

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து எந்தவித நேரடி சர்வதேச விமான சேவைகளும் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. மேலும், வெளிநாடுகளுக்கு செல்வோர் இணைப்பு விமானத்தை பயன்படுத்துவதற்காக டெல்லி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, வர்த்தகம் செழித்த கொங்கு மண்டலத்தில் இருந்து சர்வதேச விமானசேவை வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், முதற்கட்டமாக, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானசேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன், கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள் பயன்பெறும் என்றார். 

நவம்பர் 18-ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது. இந்த அறிவிப்பு கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விமானசேவை நேரம் :

  • விமான எண் 165 : டெல்லியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும். இரவு 10.00 மணிக்கு கோவை வந்தடையும்.
  • விமான எண் 166 : கோவையில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்படும். மாலை 05.05 மணிக்கு டெல்லி சென்றடையும்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...