பேருந்து பயணிகளிடம் 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் புகார்

கோவை மாவட்டம் டவுன்ஹாலில் உள்ள வைஷியாள் வீதியைச் சேர்ந்த தியாகராஜன் மொத்த நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில், ஜீவா, சேகர் ஆகிய இரண்டு ஊழியர்கள் ஊதியத்திற்கு பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அவர்கள் நகையை விற்பனை செய்வதற்காக இரண்டரை கிலோ நகையுடன் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு அரை கிலோ நகைகள் மட்டுமே விற்பனையானதால், எஞ்சிய 2 கிலோ நகையுடன் இருவரும் கோவைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். பேருந்து கோவை சாய்பாபாகாலனியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது, ஜீவா, சேகரிடம் இருந்த 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அவர்கள் கோவை சாய்பாபா காலனியில் உள்ள போலீஸில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார், புகார் அளித்த ஜீவா, சேகர் மற்றும் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...