ஆட்சியை தக்கவைக்க துடிக்கும் அதிமுக அரசு மக்கள் நலனை பாதுகாக்க தவறிவிட்டது - கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி



கோவை அரசு மருத்துவமனையில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு பிஸ்கட், ரொட்டி, பழம் போன்ற உணவு வகைகளை கொடுத்த பிரேமலதா விஜயகாந்த் மருத்துவர்களிடம் டெங்கு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. 

குறிப்பாக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள். பல விதமான காய்ச்சல் காரணமாக இந்த மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் டெங்குவால் பாதிக்கப்பட்டோரே அதிகம்.

இவை அனைத்திற்கும் காரணம் தமிழகத்தில் சுத்தமில்லாததே ஆகும். அதிமுக அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதில் செலுத்தும் கவனத்தை பொது மக்கள் மீதும் செலுத்தியிருக்க வேண்டும்.

டெங்குவால் கோவையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அரசு சார்பில் புள்ளி விபரங்கள் தவறாக கொடுக்கப்படுகின்றது என்று அவர் குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதி இல்லாதது இந்த அவல நிலைக்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை இதுவரை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் டெங்கு விவகாரத்தில் தமிழக அரசிற்கு உதவி செய்ய வேண்டும்.

மழை, வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோரை காப்பதில் முதலில் களத்தில் இறங்குவது தேமுதிக. தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை இன்று பார்வையிட்டு வருகின்றனர். திருப்பூர், கோவையை போல திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவு டெங்கு பாதிப்பு இருப்பதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு சென்றுள்ளார். 

டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளின் போது பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே டெங்கு ஒழிப்பு சாத்தியம் என ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

நொய்யல் ஆற்றில் குளிப்பதனால் தான் நுரை வருகிறது என அமைச்சர் கருப்பண்ணன் சொல்வது வேடிக்கையாக உள்ளது. தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

அதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றது நீட்டுக்காக இல்லை. தன் மீது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது தான் காரணம். இந்த ஆட்சியே ஒரு மர்மமான ஆட்சியாக உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மர்மம் விலகினால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும். இந்த ஆட்சி வெகு விரைவில் கலைக்கப்படும். நல்ல தீர்ப்பு 4 ம் தேதி வரும்.

மேலும், நடிகர்கள் யார் கட்சி துவங்கி அரசியலுக்கு வந்தாலும் சமாளிக்கும் திறமை தேமுதிகவிற்கு இருக்கின்றது."

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.



முன்னதாக, தேமுதிக-வினர் கோவை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...