டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நீலகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை ஏடிசி பேருந்து நிலையம் எதிரில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சித் தமிழரின் ஆணைப்படி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜன், வேலுச்சாமி, உதகை சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகர செயலாளர் இஸ்மாயில், கூடலூர் நகர செயலாளர் துகில் மேகம், தொழிலாளர் விடுதலை முன்னணி நகர பொருப்பாளர்கள் கணேஷ் முத்தையா, மைக்கேல், குருஸ் ராபீன், சிறுத்தை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...