மதுரை: மதுரை, செல்லூரை சேர்ந்தவர் முகமது நசுருதீன். இவரது மகன் அல் அமான், 14. காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மகனுடன் முகமது நசுருதீன் சாலை மறியலில் ஈடுபட்டார். 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், சிகிச்சை சரியில்லை எனக்கூறினார்.