தற்கொலை செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம்

ஐதராபாத் : இந்த ஆண்டு , ஐதராபாத் நகரில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டதாக குற்றவியல் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 402 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 265 பேர் ஆண்கள். 265 பேரில் 204 பேர் தூக்கு போட்டும், 39 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். 

ஐதராபாத்தில் இந்த ஆண்டு 137 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 15 பேர் தீக்குளித்தும், 16 பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் குடும்ப பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என சரியாக கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது கடன் பிரச்னையே காரணமாக உள்ளது என்றார். 

மனநல மருத்துவர்கள் கூறுகையில், பெண்களை விட ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். சில சமயங்களில் இது தற்கொலை வரை கொண்டு சென்று விடுகிறது. பொதுவாக பெண்களே அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை. இதுவே தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது. இது போன்ற மனஅழுத்தம் கொண்ட ஆண்களை கண்டறிவது மிகவும் கடினம் என்கின்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...