சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவருக்கான கோரிக்கை சிறப்பு முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 3-ம் பாலினத்தவரின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப்பிடம் மனுக்களை கொடுத்தனர்.



இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் ஷெரின் ஃபிலிப் பேசுகையில், காரமடை பகுதியில் 3-ம் பாலினத்தவர்கள் 24 பேருக்கும், சின்னவேடம்பட்டி பகுதியில் 10 பேருக்கும் குடியிருக்க இடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் தற்போது குடியிருந்து வருகின்றனர். இதேபோல, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இடம் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.



3-ம் பாலினத்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது கோரிக்கைகளை விரைவில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...