ஈஷா விவகாரம்: பெற்றோர்கள் சந்திப்பதற்கு தடைகோரி மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.20-க்கு ஒத்தி வைப்பு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் தொடங்கி, 5000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகிறார்.

இவரது மகள்களான கீதா, லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்து இருந்தார்.

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்த கீதா மற்றும் லதா ஆகியோரை மூலை சலவை செய்த ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நான்தான் கடவுள் எனக்கூறியதோடு சகோதரிகளான இருவருக்கும் திருமணம் நடக்காமல் இருக்க மொட்டை அடித்துள்ளார்.

மேலும், காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து, தங்களது குழந்தைகளை பார்க்க ஈஷா மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இருவரையும் மீட்டுத்தருமாறும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடமும் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கியிருப்பதாக கோவை முதன்மை நீதிபதியின் நேரடி விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், பெற்றோர்கள் தங்களை சந்திக்க தடை விதிக்கக்கோரி கீதா மற்றும் லதா ஆகியோர் தொடுத்த வழக்கு விசாரணை திங்களன்று நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...