சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

மாநில பாடத்திட்டத்தை போலவே, சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து கைவிடப்பட்டது. 

பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் இருப்பது சி.பி.எஸ்.இ. கல்வியின் தரத்தை பாதிக்கும் என்றும், நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என கல்வியாளர்கள் கூறி வந்தனர். 

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியளர்களிடம் பேசுகையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பு பயில வேண்டும்.  தோல்வியடையும் மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள இது போன்ற திட்டங்களுக்கு 25 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...