வால்பாறை பகுதியில் மூன்றாவது நாளாக குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்- பொது மக்கள் பீதி

வால்பாறை அடுத்த தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நாள்ளிரவில் நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாசுதேவன் மற்றும் ரோஸி என்ற தொழிலாளிகளின் வீட்டின் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது.

இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எழுந்த குடும்பத்தினர் பின் வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி கூச்சலிட்டுள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கம் வீட்டினர் தீ பந்தம் கொளுத்தியும், கூச்சலிட்டும் யானைகளை விரட்டியுள்ளனர்.



ஆனாலும், அந்த காட்டு யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று அங்கேயே முகாமிட்டுள்ளது.

மேலும் வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல், நல்லமுடி, ஜெகமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்டின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நல்லமுடி சுற்றுலாபகுதியான காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று மூன்றாவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதனிடையே, வால்பாறை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கும்கி யானைகளை வரவழைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...