குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு - வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.09.2017) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் உப்பிலிபாளையம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் கட்டுமான நிறுவன குடியிருப்புகள் அமைக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கட்சிசார்பற்ற  விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட சிலர் பாராட்டு தெரிவித்தனர்.



அப்போது, அதற்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துடன், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பாக பேசக்கூடாது என தெரிவித்தனர். குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசியதால்,  அரங்கில் இரு தரப்பு விவசாயிகள் சங்கத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதனைதொடந்து இரு தரப்பினரையும் மாவட்ட வருவாய் அலுவலர் சமரசப்படுத்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் தொடந்து நடைபெற்றது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...