தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, அந்த தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? என்றும், தாக்குதலின் போது மக்களை பாதுகாக்கும் வழிமுறை குறித்தும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் ஒத்திகை செய்தனர்.
நேற்று முன் தினம் கோவை வந்த 110 வீரர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஒத்திகை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
கட்டிடங்களில் வைக்கப்படும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது குறித்த ஒத்திகைகளை தொடர்ந்து 7 மணி நேரம் நடத்தினர்.
தேசிய பாதுகாப்பு படையினரின் இந்த ஒத்திகையின் போது உள்ளூர் போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரும் ஒத்திகை நடக்கும் கட்டிட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.