அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார், அண்ணா மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மனுவில் தெரிவித்த அவர்கள், தமிழக அரசின் பொதுத்துறை அரசாணை எண் 47 (07.01.1978) மற்றும் அதன் தொடர்ச்சியான 1990-ஆம் ஆண்டு அரசாணையின்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா மற்றும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.

ஆனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை அந்தப் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் நேரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டு மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது “புரோட்டோகால் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2025 செப்டம்பர் மாதத்திலும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் முறையாக வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தமிழக வெற்றி கழகம் எந்த தலைவர்களை கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததோ, அவர்களது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க ஏற்கனவே அரசாணை உள்ளது” என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களை அரசாணைப்படி உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...